விண்ணில் மாயமான விமானம்

மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 என்ற ஜெட் விமானமே இவ்வாறு விண்ணில் மாயமாகியுள்ளது.

ஜப்பானில் இன்று திங்கட்கிழமை (31-01-2022) மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இவ்வாறு காணாமல்போயுள்ளது.

மேலும், ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது அதனுடன் விமானத்தின் தரையில் இருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

விமானம் ரேடார் வரையறையை தாண்டி காணாமல்போன நிலையில் அதை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஜப்பானில் கடந்த 2019ஆம் ஆண்டு எப்-35 ஏ ஸ்டெல்த் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.